Wednesday, 29 July 2015
Sunday, 5 July 2015
My Mother
என் தாய்
தன்னலம் கருதாமல் எனை
இவ் வையகம் ஈன்ற தாயே
பாலூட்டி பாசத்தோடு வளர்த்தாயே
தாலாட்டி துயில வைத்தாயே – உன்
அன்பினை அன்று அறியாததேனோ என் தாயே!
அன்போடு அழகாய்
அரவணைத்தாயே
துயிலும் போதும் எனை நினைத்தாயே
பயில பள்ளிக்கு அழைத்தாயே – நல்
பண்புகள் பல பயிற்றுவித்தாயே – அதன்
பயன்தனை அன்று உணராததேனோ என் தாயே!
என் குறை குணம் கண்டு வைதாயே
பின் மறைவில் மனம் பதறி அழுதாயே
இவ் வுலகின் மன்னனாய் எனை பார்த்தாயே
உன் கண்ணின் கரு விழியாய் எனை காத்தாயே
என் கல் மனம் இன்று கரைகின்றதே
அதை நினைந்து, என் இனிய தாயே!
பால்ராஜ் சாமுவேல்
Tuesday, 16 June 2015
SATAN’S ‘6 D’ PLAN TO DESTROY MANKIND
SATAN’S
‘6
D’ PLAN
TO DESTROY MANKIND
DOUBT Creates
doubt on the
integrity of God within you
integrity of God within you
DISTRACT Side tracks your attention
from God towards him
from God towards him
DEFEAT Makes empty promises to
thrash God’s plan for you
thrash God’s plan for you
DISOBEY Persuades you to violate
God’s commandment
God’s commandment
DISUNITE Separates
you
from God’s presence
from God’s presence
DESERT
Makes you
feel like left alone
and wander away from God
Sunday, 7 June 2015
Wednesday, 20 May 2015
Thursday, 30 April 2015
Plantain Flower
வாழைப் பூ
பூத்துக் குலுங்கும் தோட்டத்தில்
தண்டுடல் கொண்ட வாழை
பட்டுடல் மேனி கொண்டு
தன் மலர்க் கரம் கூப்பி
தரிசனம் தரும் காட்சி
என் கண்களை கவர்ந்தனவே!
எழில் பொங்கும் தோற்றத்தில் – தன்
பூவிதழ் விரித்து, பூ மணம் புகுத்தி
புன்னகை பூத்து இமை சூழ நின்று
ஈர்த்தனவே தேனீக்களை தன்னகத்தே
தேனீக்கள் அமுதை சுவைத்திடும் காட்சி
என் கண்களை கவர்ந்தனவே!
மாலை மயங்கிய வேளையில் – தன்
பூவிதழ்களை மெல்ல உதிர்த்தனவே
நாளொரு மேனியாய் உரு மாறினவே
இரு திங்கள் கழிந்தனவே – காய் கனியாய்
வாழைக்குலையாய் நிற்கும் காட்சி
என் கண்களை கவர்ந்தனவே!
பால்ராஜ் சாமுவேல்
Friday, 24 April 2015
Subscribe to:
Posts (Atom)





