Tuesday, 3 November 2015

My Church

சகல பரிசுத்தவான்கள் ஆலயம்
  
இறை பக்தி நிறையூட்டி எமை இயக்கி
மறை பொருள் மனதினில் வித்திட்ட ஆலயம்
கறை படிந்த என் உள்ளமதை இறை யேசுவின்
உறைவிடமாக்க உதவிய ஆலயம்.

சஞ்சலத்தில் சஞ்சரித்திடும் நேரமதில்
தஞ்சமென சரணடைந்தேன் இவ்வாலயம்
அஞ்சாதே எனும் ஆண்டவர் குரல் கேட்டு
நெஞ்சத்தின் கலி நீங்கியது இவ்வாலயத்தில்

உம் பாதம் பணிகின்றேன் பராபரனே
சகல பரிசுத்தவான்கள் ஆலயம் எனக்கீந்ததால்
நிதம் கட்டுவோம் உம்  திருச்சபைதனை
இத்தரைதனில் உம் நாமம் சிறந்திலங்கிடவே


                        பால்ராஜ் சாமுவேல்

No comments:

Post a Comment